எங்கோ எப்போதோ ஒரு திருமண விழாவில், சிதறிய முத்துக்களாய் சிறகடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், தங்கள் அம்மாக்கள் சாப்பிட அழைத்த போது, ஒரே வினாடியில் ஓடி அவர்களை கட்டிப் பிடித்துக் கொண்ட காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.
விதவிதமான குழந்தைகள், பல நிறங்கள், பல்வேறு முக அமைப்புகள் கொண்ட அனைவரும் தத்தமது தாய்மார்களை வினாடியில் இனம் கண்டு தேடிப் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.
பல வருடங்களுக்குப்பின் ஷார்ஜாவில் நான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில், எனது பால்கனியில் பல புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்திருந்தன. அவற்றில் எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் அந்த நூற்றுக்கணக்கான புறாக்களின் குஞ்சுகள் தங்களின் தாயையும், தந்தையையும் மிகச் சரியான இனம் கண்டு கொள்வது எனக்கு இன்றளவும் பேராச்சரியம். திடீரென ஒரு பெரிய அரவம் கேட்டால், அதிர்ந்து பறக்கும் அவற்றுள் எனது செல்லப் புறா எது என்று என்னால் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தாய்க்கும், குழந்தைகளுக்குமான பிணைப்பு, ஒரு கண்ணுக்குத் தெரியாத மானசீக சங்கிலியாய் இந்த பூமிக் கிரகம் முழுவதும் வியாபித்து இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு.
இதனடியில் வரும் கவிதை ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இப்போது இதனை மிக அழகாக திருத்தி பிரசுரிக்க என்னால் இயலுமென்றாலும், இதை ஆத்மார்த்தமாக எழுதிய அந்த இளம் கவிஞனுக்கு உரிய மரியாதை தரும் வகையில் அதை அப்படியே தருகிறேன்.
இதோ ..... உங்களுக்காக1
விதவிதமான குழந்தைகள், பல நிறங்கள், பல்வேறு முக அமைப்புகள் கொண்ட அனைவரும் தத்தமது தாய்மார்களை வினாடியில் இனம் கண்டு தேடிப் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.
பல வருடங்களுக்குப்பின் ஷார்ஜாவில் நான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில், எனது பால்கனியில் பல புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்திருந்தன. அவற்றில் எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் அந்த நூற்றுக்கணக்கான புறாக்களின் குஞ்சுகள் தங்களின் தாயையும், தந்தையையும் மிகச் சரியான இனம் கண்டு கொள்வது எனக்கு இன்றளவும் பேராச்சரியம். திடீரென ஒரு பெரிய அரவம் கேட்டால், அதிர்ந்து பறக்கும் அவற்றுள் எனது செல்லப் புறா எது என்று என்னால் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தாய்க்கும், குழந்தைகளுக்குமான பிணைப்பு, ஒரு கண்ணுக்குத் தெரியாத மானசீக சங்கிலியாய் இந்த பூமிக் கிரகம் முழுவதும் வியாபித்து இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு.
இதனடியில் வரும் கவிதை ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இப்போது இதனை மிக அழகாக திருத்தி பிரசுரிக்க என்னால் இயலுமென்றாலும், இதை ஆத்மார்த்தமாக எழுதிய அந்த இளம் கவிஞனுக்கு உரிய மரியாதை தரும் வகையில் அதை அப்படியே தருகிறேன்.
இதோ ..... உங்களுக்காக1
என் அம்மா
'' உலக அழகி வருகை ''
தெருவோரப் பிச்சைக்கார சிறுமி
எழுத்து கூட்டி படித்தாள்.
அழகி என்றால் என்ன?
மனதிற்குள் குழப்பம் - நேரில்
கண்டறியவும் ஆவல் - ஆனால்
இங்கே வறுமையின் நிறமோ
வயிற்றில் சுற்றியுள்ள
ஈரத்துணியின் சிவப்பு.
அதோ அம்மா !
நல்ல கருப்பு நிறம் - மிகவும்
எடுப்பான மஞ்சள் பற்கள்.
சடை சடையாய் தொங்கும்
எண்ணையறியாத் தலைமுடி.
மூடிக் கிடக்கும் அந்தக்
காதுகளின் துளைகள்.
இனி கிழிக்க முடியாத
கந்தலுடை.
'' பாப்பா .... உனக்கு ரொட்டி ''
உள்ளன்புடன் அருகே
இழுத்தணைத்து பரிவுடன்
ஊட்டி விடும் என்
இவ்வுலகத்துணை - ஆம்
ஒரே துணை.
மறுநாள், ........
ஆதவன் சுடர்விட்டெழுந்தான்.
வழக்கம் போல் கடமை தவறாமல்
குப்பை பொறுக்கும் அன்றாட வேலையில்
அமிழ்ந்திருக்கையில் பரபரப்பு.
'' அதோ அதோ, .... அந்த
உலக அழகி வருகிறாள் ''
எங்கும் ஆரவாரம்.
செத்த எலியைத் தேடிவரும்
காக்கைக் கூட்டத்தின்
கா .... கா .... கா .... அவலம்.
மெல்ல எட்டிப் பார்த்தாள்
அந்த அழுக்கு சிறுமி.
'' அதோ அவள்தான்
நேற்று பேருந்தினில் சிக்கி
உயிர் விட்ட பன்றியின்
இரத்தத்தின் நிறம் ''
இவளா உலக மகா அழகி !
மனதில் கேள்விக்குறி.
'' எந்த விதத்தில் இவள் அழகி
என் அம்மாவை விட ? ''

No comments:
Post a Comment