Saturday, March 19, 2011

என் மன பதிவுகள் - 1990 - இருபது வருடங்களுக்கு முன்

எனக்கு பிடிக்காதவை

அழகான பெண் குழந்தை
படத்திற்கு தாடி மீசை போட்டு
இரசிக்கும் வக்கிரமானவர்களை.

குழந்தைகளை தலையில்
நங் ..... கெனக் கொட்டும்
ராட்சசிகளை, ......

குழந்தைகளை திமிறத் திமிற
உதட்டில் அழுந்த முத்தமிடும்
சுயநலக்காரர்களை, ........

குழந்தைகளுக்கு பின்பக்கத்தில்
நறுக் ......... கென ஊசி போடும்
அரக்க மருத்துவர்களை.

என்னனுமதியின்றி என்
கவிதைகளை படித்து விட்டு
கண்களால் என்னை அளவெடுப்பவர்களை.

என் கவிதைத் தொகுப்பில்
தனக்கு பிடித்த கவிதைகளை
குறியிடுபவர்களை, ...........
சபாஷ், பலே, அருமை
என்று எழுதும் ஞான சூன்யங்களை.

என் கவிதைத் தொகுப்பில்
சம்பந்தமில்லாத பொன்மொழிகளை
எழுதி தன் மேதா விலாசத்தை
வெளிப்படுத்தும் பிரகஸ்பதிகளை, ......

கொடுத்த வாக்கினை வேண்டுமென்றே
காப்பாற்றாமல் விடும்
மனதிடமற்றவர்களை.

உண்மையை சொல்
என்று சொல்லியும் பொய்களை
கூசாமல் சொல்லும் புளுகர்களை, ..........

நண்பனாய் எதிரில் நடித்து
பின்னால் தூற்றும்
சிநேகிதத் துரோகிகளை.

நான் என்னவோ அவர்களுக்காக
எழுதுவதாக நினைத்து என்
கவிதைகளை திருத்துபவர்களை

புதுப்பாதை, வெளிச்சம் என
தனக்கே புரியாத கவிதைகளை
எழுதும் புகார் கவிஞர்களை.

No comments:

Post a Comment